இயற்கை எப்போதும் அழகு கொட்டும் மழையும் அழகு
சிறு தூரலும் அழகு
கொட்டும் பனியும் அழகு
பனிமூட்டமும் அழகு
உடல் சுடும் சூரியன் அழகு
மேகத்தில் மறைந்திருக்கும் கதிரவனும் அழகு
யாவும் அழகு நீ ரசித்தால்
குட் மார்னிங்
#யாழ்
உன்னிடம் பேசவும்
பகிரவும் முன்பை விட இப்பொழுது அதிகம் இருக்கிறது என்ன செய்ய எல்லாவற்றையும் உன் நினைவுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் ....
நான் நான் மட்டுமே...
ஏதோ ஒன்றை தேடி இந்த வாழ்க்கை நகர்கிறது ... கிடைத்ததையெல்லாம் தேடியவை இல்லை....
தேடியவையெல்லாம் பிடித்தவை இல்லை... பிடித்தமானவை எல்லாம் நிலைக்கவில்லை....
ஆனால் தேடல் மட்டும் தொடர்கிறது ...
விடாமல் மழை பெய்யும் பொழுது சிலருக்கு
இதமான தென்றல் வீசிக் கொண்டே இருக்கிறது....
பலருக்கோ நச நச வென்று மழை பெய்து கொண்டே இருக்கிறது....
விருப்பமும் வெறுப்பும் ஒன்றாய் மழைமீது
இரவல் உயிர் தான் அவள் எனினும் என் உயிர் என உருவேற்றி கொண்டவள் ...
எல்லாம் நான் தான் அவளுக்கு
எல்லாமுமாகவும் நான் தான் அவளுக்கு...😍
மகிழ்ச்சி சூழ் உலகில் வாழ வேண்டுகிறேன்...
#யாழ்
புத்தகத்தின் பக்கங்கள் வெறும் எழுத்துகளை சுமந்து கிடைப்பதில்லை அவை வரலாறுகளையும் அதை படைக்க எத்தனிப்பவர்களின் அடையாளங்களையும் சுமந்து கிடக்கிறது...
#யாழ்
இங்கு எதுவும் யாரும்
எதற்காகவும் நிற்க்க போவது இல்லை எல்லாம் முன்பை விட சிறப்பாக இயங்கும் என்பதை மட்டும் நினைவில் கொள்...
நீ இயங்க தொடங்குவாய்...
வாழ்வு இனிது
குட் மார்னிங்
#யாழ்
சிலர் இடம் மட்டுமே தோற்றுபோக பிடிக்கிறது ...
சிலர் இடம் மட்டுமே இல்லாத கோவத்தை தேடிப்பிடித்து வைத்துகொள்ள பிடிக்கிறது...
சிலரிடம் மட்டுமே
சுயம் இழக்க பிடிக்கிறது...
இப்படியாக தோன்றும் ஒருவருக்கு இவை யாவும் அந்த ஒருவர் இடம் நிகழ் சாத்தியம் தான் குறைவாக உள்ளது...💔
#யாழ்
நடப்பதெல்லாம் நன்மைக்கே ...
நீ இருக்க...
யாம் இருக்க பயம் ஏன் எல்லாம் நினைவுக்கு வருகிறது மனிதனுக்கு உடைந்து போகும் போது எல்லாம்...
கடவுள் இருக்க தான் செய்கிறார்...
குட் மார்னிங்
#யாழ்
விடிந்தது என சொல்லும்
பனியின் வாசம்...
சேவல் கூவும் சத்தம்...
பறவைகள் கீச் கீச் கூச்சல்...
மனிதர்கள் சந்தடி சத்தம் ...
எல்லாம் கடந்து பிடித்தவர்களின் அழைப்பு
அ(இ)ந்த நாள் இனிய நாளாக
குட் மார்னிங்
#யாழ்