விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு அரசியல் காரணத்திற்காக திமுக அரசு கு��ுக்கே நிற்பது வேதனை அளிப்பதாக உள்ளது என பிஜேபி மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை கூறியுள்ளார்.
இன்று விழுப்புரம் மாவட்டம் சிக்னலில் ஈஷா யோகா அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு 150-க்கும் மேற்பட்ட ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார்.
#COVID19
#Corona
#TamilNadu
கோவை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரின் மனைவி லட்சுமி ரவி ஆகியோர் கோவை ஈஷா யோகா மையத்திற்கு இன்று வருகை புரிந்தனர். அங்கு சத்குருவை சந்தித்த அவர்கள் தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகி ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை தொடங்கி வைக்க வருகை தந்த தெலங்கானா & புதுவை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
@DrTamilisaiGuv
பள்ளிகளில் பாலியல் ரீதியான புகார்கள் வரும் போது பள்ளிக்கு அவபெயர் ஏற்படும் என்று நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்ய கூடாது.
பள்ளி மாணவர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண் 14417 வரும் காலங்களில் பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடிக்கப்படும்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பிரசித்திபெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான
@DrTamilisaiGuv
வழிபாடு மேற்கொண்டார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதார செயல்பாடுகளுக்காக 70 ஆயிரத்து 51 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில், கொரோனா தாக்கத்தால் வாய்ப்புகளையும், வருவாயையும் இழந்த தெருக்கூத்து கலைஞர்கள், இணையம் வழியாக தெருக்கூத்து நிகழ்த்தி வருவாய் ஈட்டும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு இணையத்தில் தெருக்கூத்து நடத்துகின்றனர்.
தருமபுரி- மொரப்பூர் ரயில் பாதை இணைப்பு திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினியிடம் மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் ரயில்வே துறை பொறியாளர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆற்றவுள்ள மன் கி பாத் உரையை அனைவரும் கேட்டு பயனடைய வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவ்டேக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊரடங்கு காரணமாக நலிவுற்ற மக்களுக்காக,மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன் தனது மகளின் எதிர்காலத்திற்கு சேமித்த 5 லட்ச ரூபாயை நல திட்ட உதவியாக வழங்கியுள்ளார். இந்நிலையில் மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் தமக்கு பாராட்டு தெரிவித்தது புது உற்சாகத்தை வழங்கியதாக அவர் கூறுகிறார்
உக்ரைனிலிருந்து தூத்துக்குடி விமான நிலையம் திரும்பிய மாணவர் சந்தோஷ், மத்திய அரசுக்கும், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
@narendramodi
@MEAIndia
#OperationGanga
அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மனநலம் குன்றிய சிறார்களுக்கான இல்லத்தை, மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று திறந்து வைத்தார்.
முழு ஊரடங்கு காலத்தில் ஆங்கில மருந்து கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்றே நாட்டு மருந்து கடைகளும் இயங்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி. ஸ்ரேயா பி சிங், முழு உடல் கவச உடை அணிந்து, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கோவிட் சிகிச்சை பெற்று வரும் நபர்களிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான திருமதி தமிழிசை செளந்தரராஜன் தனது இல்லத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
@DrTamilisaiGuv
பிரதமர் திரு நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடையே தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் மனதின் குரல் நிகழ்ச்சி இம்மாதம் 30ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உறைபனி, பசுமைப் புற்களின் மேல் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கும் மலைகளின் இளவரசி.
#dindugal
#kodaikanal
#snowday
தருமபுரி: பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் அரசு பள்ளிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி தருமபுரி அரசு மாதிரி பள்ளி மாணவி மகாலட்சுமி முதலிடம் பெற்றுள்ளார்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தேசிய நெடுஞ்சாலையை தருமபுரி மக்களவை உறுப்பினர் எஸ்.செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
#TamilNadu
#TN
#Dharmapuri
#Road
#Highway
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளதாக பி ஜே பி மாநிலத் தலைவர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
ஃபோனி புயல் குறித்த எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம், துல்லியமாக கணித்து முன்கூட்டியே தெரிவித்ததன் காரணமாக, பெருமளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்தற்கு ஐநா பேரிடர் மேலாண்மைக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
பிரதமர்
@narendramodi
-யின் வானொலி உரையான #மனதின்குரல் நிகழ்ச்சியை தமிழாக்கம் செய்து வழங்கும் சென்னை அகில இந்திய வானொலி நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு சுதர்சனை, தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான
@DrTamilisaiGuv
பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
சென்னை: "Iconic Women of Tamilnadu" என்ற தலைப்பில் மூன்றுநாள் கண்காட்சியை அம்பத்தூரில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் திருமதி. குஷ்புசுந்தர், தொடங்கி வைத்தார்.
@khushsundar
இன்று காலை சென்னை வரும் பிரதமர் திரு
@narendramodi
, காரைக்காலில் உள்ள ஜிப்மர் வளாகத்தில் 491 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
@PMOIndia
பனை மரங்களை வளர்ப்���தற்கு நடப்பாண்டில் பத்து கோடி ரூபாய் செலவில் இரண்டு கோடியே 50 லட்சம் பனை விதைகள் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் - முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி
தருமபுரி மாவட்டத்தில் சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று பிற்பகல் வாக்கில் அரூர் தென்கரைகோட்டை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
#TamilNadu
#Dharmapuri
#Rain
கோவிட் 19 சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருத்துவ ஆக்ஸிஜனை விமானம் மூலம் கொண்டு செல்லும் பணிகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆய்வு மேற்கொண்டார். விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதூரியாவிடம் மேலும் விரிவுபடுத்த நடவடிக்க��� எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.
அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கடைகளுக்குச் செல்லும், திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் கையில் ஒரு குடை எடுத்துச் சென்றால், தனி மனித விலகல் கடைபிடிக்கப்பட்டு கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும் என அறிவுறுத்தி உள்ளார் திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன்.
#TamilNadu
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை காலை ஒன்பதரை மணிக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடம் தமது நமோ செயலி மூலம் கலந்துரையாடுகிறார். அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் அலைவரிசைகளில் இது ஒலிபரப்பாகிறது.
காஞ்சிபுரத்தில் கடந்த 48 நாட்களாகநடைபெற்று வந்த அத்திவரதர் வைபவம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதற்கான சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் - காஞ்சிபுரம் மாவட்டஆட்சியர் திரு பொன்னையா.Air Pics: Sivakumar
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள உருவச்சிலைக்கு தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
@DrTamilisaiGuv
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
#WorldEnvironmentDay
#உலக_சுற்றுச்சூழல்_தினம்
**மனிதனுக்கு தண்ணீர் கிடைக்க பல வழிகள் இருக்கலாம்..
**ஆனால் விலங்குகளுக்கு இருக்கும் ஒரே வழி, திறந்த நீர்நிலைகள் தான்..
**எனவே அவற்றை மாசுபடுத்தாதீர்...
தர்மபுரி மாவட்டத்தில் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரம் ஏக்கரில் மிகப் பெரிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற பிரதமர் திரு. நரேந்திரமோடி எழுதிய
#ExamWarriors
புத்தக வெளியீட்டு விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
நாடு முழுவதும் கூடுதலாக 75 அரசு மருத்துவ கல்லூரிகளை தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக 15 ஆயிரத்து 700 மருத்துவ படிப்பு இடங்கள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 வயதிற்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியினருக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் டாக்கூர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 19 சாலைகளை விரிவுபடுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதர்வ் என்னும் இச்சிறுவன் இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத ரசிகர். இவர் அரியவகை எலும்பு புற்றுநோய் காரணமாக தனது ஒரு காலை இழந்தவர்.
👉அவர் தேசிய போர் நினைவுச்சின்னம் சென்று நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தருணம்.
விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டத்தின்கீழ், 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியை பயனாளிகளுக்கு பிரதமர் திரு நரேந்திரமோடி இன்று விடுவித்ததற்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
#PMKisan
புதுதில்லி: தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா
#NationalFilmAwards
சிறப்பு விருது, ஒத்த செருப்பு திரைப்படத்திற்காக நடிகர் பார்த்திபனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் உணவு தயார் செய்யப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.
#Lockdown
#TamilNadu
#Corona
#StaySafe
#COVID19
#TN
பெங்களூரு – மைசூரு அதிவிரைவுச் சாலை, பயண நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 75 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது, நாட்டின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்
- மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் திரு. நிதின் கட்கரி.