பாராட்டுகள்
@ikamalhaasan
சார்! நாங்களெல்லாம் அடைத்துகிடக்கும் அரசின் செவிகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் தட்டிக்கொண்டிருந்தபோது, நீங்கள் நீதியின் கதவைத் தட்டித் திறந்துவிட்டீர்கள்! மூச்சுத் திணறும்போது கிடைக்கும் ஆக்சிஜனின் அளவு சிறிதானாலும் பலன் மிகப்பெரிது! 👍
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் இன்று தியேட்டருக்குச் சென்று மாமன்னன் திரைப்படம் பார்த்தேன். இப்படியொரு படத்தைப் பார்ப்பதற்காகத்தான் 10 ஆண்டுகளும் காத்திருந்ததுபோல் இருந்தது. நன்றி
@Udhaystalin
🙏🏿 நன்றி மாரி செல்வராஜ் 🙏🏿
தமிழ்நாட்டுக்கு இரண்டாவது தலைநகர் தேவை என்கிறபோது இந்தியாவுக்குத் தேவையில்லையா? இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னையை அறிவிக்கவேண்டும்.இதை தமிழக அரசு வலியுறுத்தவேண்டும்
நடனக்கலைஞர்,நடிகர்,பாடகர்,பாடலாசிரியர்,இயக்குநர்,தயாரிப்பாளர்,கலைத்துறையில் 60 ஆண்டுகள் பணியாற்றியவர்
@ikamalhaasan
ஐ விட திரைத்துறையில் சாதனை புரிந்தவர்கள் வேறு யார் ?
ஆழ்துளைக் கிணறோ, பாதாள சாக்கடையோ - சிக்கிக்கொண்டோரைக் காப்பாற்றுவதற்கான கருவிகள் இல்லாதது தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனையல்ல; மனித உயிர்களை இந்த நாடு எவ்வளவு மலிவாகக் கருதுகிறது என்பதன் அடையாளம்
99% படித்தவர்கள் உள்ள ஒரு நாட்டில் டிரம்ப் போன்றவர்கள் அதிபராக முடிகிறதென்றால் அங்கிருக்கும் கல்வி முறையில் மட்டுமல்ல தேர்தல் முறையிலும் ஏதோ கோளாறு இருக்கிறது என்று பொருள்
மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைப் பெற்றுத் தந்ததில் மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்களின் வாதம் முக்கியமானது.அவருக்கு என் பாராட்டுகள்!👏👏
விசிகவின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவையில் இடம்பெறுவது உறுதியாகிவிட்டது. தமிழக வரலாற்றில் இதுவரையில் இல்லாத சாதனையை தலைவர் எழுச்சித் தமிழர்
@thirumaofficial
படைக்கப்போகிறார் 👏👍
ஒரு நாடு தனது ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில் பகுத்தறிவோடு செயல்படவில்லையென்றால் எப்படி சீரழியும் என்பதற்கு அமெரிக்கா சாட்சி. இது நாம் கற்கவேண்டிய பாடம்
“ கமல் திமுக கூட்டணி கட்சிகளைத்தான் இழுக்க பாடுபட்டுக்கொண்டிருந்தார்; அதிமுக கூட்டணியிலும்தான் தேமுதிக இடப்பிரச்சனை இருக்கு அந்த கட்சிக்கு தூது விடராறா பாருங்க”
- ஒரு நண்பரின் கேள்வி 👌
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுத் தனது திறமையான பந்துவீச்சின்மூலம் பாராட்டுகளைப் பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு வாழ்த்துகள்! இந்திய கிரிக்கெட் அணி சாதிக்க வேண்டுமெனில் அது சமூகரீதியில் ஜனநாயகப்பட வேண்டும் என்பதை நடராஜனின் நுழைவு மெய்ப்பித்திருகிறது!
அமைச்சர் சேகர்பாபு
@PKSekarbabu
அவர்களுக்குப் பாராட்டுகள் 🎉🎉
தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நடராஜர் கோயிலில் இப்படியொரு அன்னதானக் காட்சியைக் காணமுடியுமா?
👏👏👏
தமிழக அரசு எதைக் கேட்டாலும் தருகிறது உச்சநீதிமன்றம்.
தமிழகத்துக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி பாக்கி 12 ஆயிரம் கோடியைக் கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றால் என்ன ?
முரசொலி கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடவேண்டிய நேரமிது! கலைஞரின் ஒரு கட்டுரையையாவது இந்த ‘சூப்பர் ஸ்டாரால்’ புரிந்துகொள்ள முடியுமா?
@arivalayam
@Udhaystalin
டெல்லி, நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்டோர் தாமே முன்வந்து கொரோனா தொற்று சோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும். அதுதான் அவர்களுக்கும், அவர்களைச் சார்ந்திருப்போருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது. வெறுப்புப் பிரச்சாரத்துக்கு இடம் தராதீர்கள். 🙏🏿
நடிகர் சிவக்குமார் அவர்களின் வாழ்த்து
" தனித்து நின்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் ரவிகுமார் போன்றவர்களை தமிழ் மக்கள் தேர்வு செய்து பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்"
நமது நாட்டின் நிர்வாக அமைப்பில் ஒரு மாவட்ட ஆட்சியர் நினைத்தால் அந்த மாவட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்
@kavitharamu
அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தேன்.
தலைவர் எழுச்சித்தமிழர்
@thirumaofficial
அவர்கள் ட்விட்டரில் விடுத்த வேண்டுகோளின் நியாயத்தை அங்கீகரித்து, வரலாறு இதுவரை கண்டிராத நடவடிக்கையை எடுத்து இந்த மகத்தான கூட்டணியில் மனக் கசப்பு நேராமல் பாதுகா��்திருக்கும் திமுக தலைவர் அண்ணன் தளபதியார்
@mkstalin
அவர்களுக்கு நன்றி 🙏🏿🙏🏿
திமுக தலைவர் நலம் விசாரித்தார்
இன்று காலை திமுக தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் ��ல்லத்திலிருந்து போன் வந்தது. தலைவர் பேசுகிறார் என இணைப்பைக் கொடுத்தனர். “ நல்லா இருக்கீங்களா? “ என்று வழக்கமான வாஞ்சையோடு கேட்டவர் ‘ திருமா எங்கே இருக்கிறார்?
இந்த நாட்டை அம்பானிக்கும் அதானிக்கும் அடகுவைக்க அனுமதிக்க மாட்டோம் இது விவசாயிகளுக்குச் சொந்தமான நாடு என்பதை செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி உலகுக்கு உணர்த்திய விவசாயிகளுக்கு வீர வணக்கம்!
இன்று மாலை நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க தலைவர் எழுச்சித் தமிழர்
@thirumaofficial
அவர்கள் டெல்லி செல்கிறார். நானும் உடன் செல்கிறேன்
தேசிய கல்விக்கொள்கை கூட்டத்தைப் புறக்கணித்த தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ்
@Anbil_Mahesh
அவர்களைப் பாராட்டுகிறேன் 👏👏பெரும்பான்மை மக்களைக் கல்விபெறாமல் தடுக்கும் அந்த சனாதனக் கொள்கையை ஒருபோதும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது
#RejectNEP
‘நீங்கள் இந்தியரா?’ எனக் கேட்டு கனிமொழி எம்பி
@KanimozhiDMK
அவர்களை அவமதித்த சென்னை விமானநிலைய CISF பெண் அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மனுஸ்மிருதி குறித்து எழுச்சித் தமிழர்
@thirumaofficial
பேசியதை காவல்துறையினர் முழுமையாகக் கேட்டிருந்தால் ‘சபாஷ்’ போட்டிருப்பார்கள், எஃப் ஐ ஆர் போட்டிருக்கமாட்டார்கள்.
#RejectManu
திரு ரஜினிகாந்த் என்னும் ஆற்றல் மிக்க பேச்சாளர் !
‘ கலைஞர் என்னும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் திரு
@rajinikanth
அவர்கள் பேசியது எல்லோரது மனதையும் தொட்டது. அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும்கூ��� என இன்று அந்த அரங்கிலிருந்த அனைவரும் ஒப்புக்கொவார்கள். எந்த ஒளிவு
நண்பர்களுக்கு வணக்கம்
இன்று நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பதவி ஏற்கிறேன். தேர்தல் காலத்தில் நீங்களெல்லாம் எவ்வித கைமாறும் கருதாமல் ஆற்றிய களப்பணிகள்தான் இன்று என்னை நாடாளுமன்றத்திற்குப் போக வைத்திருக்கின்றன. உங்களுக்கு எனது நன்றி.
கலப்புத் திருமணம் செய்துகொண்டோருக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை - 1986இல் திரு எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது பிறப்பித்த ஆணை- திரு
@EPSTamilNadu
அவர்களால் நிறுத்தம். மீண்டும் செயல்படுத்துமாறு மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்களுக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கடிதம்
தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் எஸ்.ரஞ்சித் (Gr1 PC1543) டி.ரங்கராஜன் (PC770)ஜி.அசோக் (PC259) ஆகியோரை மீண்டும் கடலூர் மாவட்டத்தில் பணியமர்த்த மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்
Dear Mr
@sundarpichai
Conversation enhances understanding and unity.Denying the opportunity for exchange of ideas means bowing to hatred and discrimination. Rethink your decision and set a good example.
#DEI_TalkOnCaste
மைய நீரோட்ட ஊடகங்கள் கவனிக்காத பகுதிகளைக் கவனித்து, ஊடக வெளியை சனநாயகப்படுத்தும் முனைப்புகொண்ட தோழர் குணா அவர்கள் ஊடக உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து சாதனைகள் பல நிகழ்த்த அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்!
@GunasekaranMu
தமிழ்க் கடவுள் முருகனுக்கு தமிழில் மட்டுமே வழிபாடு
தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் முருகனின் அறுபடைவீடுகளான பழநி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய கோயில்களில் தமிழில் மட்டுமே வழிபாடு நடத்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கும் அர்ச்சகர் நியமனம் குறித்து அவதூறு பரப்புவர்கள்மீது நீதிமன்ற அவமதிப்பின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாண்புமிகு அமைச்சர்
@PKSekarbabu
அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை சந்தித்தோம்
கோவை முப்பெரும் விழா முடிந்து சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் மாண்புமிகு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களும் நானும் சந்தித்து உரையாடினோம்.
ஒருவர்கூட உயிரிழக்காத கொரொனா வைரஸ் பிரச்சனைக்கு நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்துகிறது மோடி அரசு.ஆனால் 54 பேர் படுகொலைசெய்யப்பட்ட டெல்லி கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் பேசக்கூட அனுமதி மறுக்கிறது.
#CommunalismIsDangerousThanCorona
‘தமிழ்நாடு வெதர்மேன்’ திரு ப்ரதீப் ஜானை மதரீதியில் அவதூறு செய்வதும், அவரைக் கொலைசெய்யவேண்டும் எனப் பதிவிட்டு வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் ஏற்புடையதல்ல. இதைத் தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. உரிய நடவடிக்கை எடுக்��வேண்டும்
“ We are fighting for honor. We are getting ready to lead mankind to perfection. For this, we are ready to do any sacrifice necessary.” - Dr B.R.Ambedkar
ஒரு புத்தகத்தைப் பரிசாகப் பெறுங்கள்
உலக புத்தக நாளான இன்று உங்களுக்கு அருகாமையில் உள்ள பொது நூலகம் ஒன்றுக்குச் செல்லுங்கள்.அங்கிருந்து ஒரு செல்ஃபி எடுத்து இங்கே பின்னூட்டமாகப் போடுங்கள்.உங்கள் முகவரியை இன்பாக்ஸ் செய்யுங்கள்.உங்களுக்கு புத்தகம் ஒன்றை இலவசமாக அனுப்பி வைக்கிறேன்
இன்று துணிச்சலான இரண்டு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்பதை திரு ரஜினிகாந்த் சூசகமாக அறிவித்துவிட்டார். மருத்துவப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீட்டுக்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுவிட்டது.
இரண்டுமே பாஜகவுக்கு எதிரான அறிவிப்புகள். வாழ்க தமிழகம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞரின் 98 ஆவது பிறந்தநாளில் வெளியிட்டுள்ள மதுரையில் நூலகம், எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி, கனவு இல்லம் ஆகிய மூன்று அறிவிப்புகளும் மகத்தானவை.வாசகர்களையும் எழுத்தாளர்களையும் ஒருசேர பெருமைப்படுத்துபவை! 👏👏