தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக என்னை நியமித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு எனது நெஞசார்ந்த நன்றி. அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு தகுதி உள்ளவனாக இருப்பேன்!💐💐💐
ரஷ்யா தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசி உலகம் முழுவதும் ஒரே விலையில் ₹732/ க்கு விற்கும்போது இந்தியாவில்மட்டும் அது ₹995/ க்கு விற்பதெப்படி? நாம் மட்டும் ஏன் ₹263 அதிகம் கொடுக்கவேண்டும்?இந்த விலைக்கு மத்திய அரசு எப்படி அனுமதி அளித்தது? கேட்க யாருமில்லையா?
இது எப்படி?
42 ரஃபேல் விமானங்களை இந்தோனேசியா ₹61000
கோடிக்கு வாங்கியுள்ளபோது, இந்தியா எப்படி 36 விமானங்களை ₹66500 கோடிக்கு வாங்கியது?
சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழலா?
மக்கள் கவனத்தை திசைதிருப்பவே ஹிஜாப் தடையா?
தேசிய ஊடகங்களின் மௌனம் ஏன்?
@INCTamilNadu
46 ஆண்டு காலம் என்னோடு இல்லறம் நடத்தி எனக்கும் என்பிள்ளைகளுக்கும்
வழிகாட்டும் ஒளிவிளக்காக இருந்த என் அருமை மனைவி இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதினை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.இறுதிச் சடங்குகள் நாளை 5-5-2021 அன்று மதியம் 12 மணி சென்னை அண்ணாநகர் பனித. லூக்கா ஆலயம்
பிரதமர் முன்பு மாண்புமிகு முதலமைச்சர் ஆற்றிய உரை கூட்டாட்சி தத்துவத்தின் வரலாற்றில் மிக முக்கிய மைல் கல்..
சுதந்திர இந்திய வரலாற்றில் பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு ஒரு முதலமைச்சர் நிதிப் பங்கீட்டில் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து நியாயம் கேட்டது இதுவே முதல் முறை!
"இளையராஜாவுக்கு கருத்து சுதந்திரம் உண்டு"என்று சகோதரி தமிழிசை சொல்வது சரியே! அதைப்போல இளையராஜாவின் கருத்து அபத்தமானது, உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவிக்க மற்றவர்களுக்கும் சுதந்திரம் உண்டு என்பதையும் தமிழிசை ஏற்றுக்கொள்வார் என்றும் நம்புகிறேன்!
கை,கால்,கழுத்து என அவயங்களுக்கு தனி பெயர் இருந்தாலும் அவைகள் உடலோடு இருந்தால்தான் உயிரோடு இயங்கமுடியும்.கொங்குநாடு,செட்டிநாடு,வருஷநாடு,நாஞ்சில்நாடு,மறவர்நாடு,தென்பாண்டிநாடு என்பதெல்லாம் தமிழ்நாட்டின் அங்கங்கள்!அவற்றை பிரிக்க நினைப்பவர்கள் தமிழின்,தமிழனின்,தமிழ்நட்டின் எதிரிகள்!
கோவிட் முதல் அலை முடிந்தவுடன் தங்களது ஆக்ஸிஜன் உற்பத்தியை இரண்டு மடங்காக்க்கூட்டியது கேரள பின்னராயி விஜயன் அரசு. இன்று தங்களது தேவையைவிட மூன்றுமடங்கு அதிகம் உற்பத்தி செய்யும் கேரளம்பிற மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளைசெய்யும் உபரிமாநிலமாகதிகழ்கின்றது.இது கேரளமாடல்.பாராட்டுக்கள்!
தமிழக காங்கிரஸ் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்களால் நியமனம் செய்யப்பட்டிருக்கும் அன்பு சகோதரர் செல்வப்பெருந்தகை அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
தமிழக காங்கிரஸ் வரலாற்றில் புதிய சிகரங்களைத் தொட இறையருளை இறைஞ்சி
முக பவுடர், உதட்டு சாயம், சருமத்தை வெள்ளை ஆக்கும் கிரீம் தயாரிக்கும் பாபா ராம்தேவ் கம்பனிக்கு 5 ஆண்டு வரி கிடையாதாம். உயிர் காக்கும் மருந்துக்கு வரி! கோரான தடுப்பு ஊசி க்கு வரி. மோடிஜியின் ஆட்சியில் அம்பானி அதானி கம்பெனிகள் தர்ம ஸ்தாபனங்கள்!
நேற்று காலையில் ஒரு முக்கியமான மேனாள் காவல்துறை உயர் அதிகாரி வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ அனுப்பியிருந்தார்.
சென்னை அண்ணா நகரில் ₹4000 மின்கட்டணம் கட்டப்போன ஒரு பெண்ணிடம் ஒருநாள் காலதாமதத்திற்காக
₹14000 கட்டவேண்டும் என மின்வாரியம் வற்புறுத்துவதாக கண்ணீர் மல்க புலம்புவதும் அதனைத்
உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ள ‘தி எகனாமிஸ்ட்’ சர்வதேச இதழ் முதலமைச்சர் தளபதியார் பற்றி முழுப்பக்க கட்டுரை வெளியிட்டுள்ளது.
‘இந்தியாவின் தலைவர்வழங்காத செயல்திறனை வழங்கும் தமிழகத்தின் தலைவர்’என புகழாரம்! இது சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும்.
தமிழகத்தின் நல்லகாலம்!
கண்காணாத தேசத்தில் ஒரு விளையாட்டுப் போட்டியின் வெற்றியினை நாள்முழுவதும் கொண்டாடி கோடிகளில் பரிசுவழங்கும் நாம் ஒன்றரைக் கோடி விவசாயிகள் கடும் குளிரில் சாலைகளில் கிடப்பதை நாமும் நமது ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லையே!ஏன்? கிரிக்கெட் வெற்றியைவிட விவசாயிகளின் வாழ்வு முக்கியமல்ல வா?
சிவனடியார் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதும், திருநீறும் பொட்டும் இட்டு கதவோரம் பக்தி பரவசமாய் பெண் ஒருவர் நிற்பதும் தூத்துக்குடி தூய பனிமய மாதா தங்கத்தேர் உற்சவத்தில்..
மதச்சார்பற்ற அரசியல் மட்டுமல்ல , மதம் கடந்த ஆன்மீகமும் இன்றைய தேவை..
அன்னையே!அண்டி வருவ��ர் அனைவரையும் அரவணைப்பாய்!
பெருந்தலைவர் காமராஜர் ஓரு காலத்தில் Mr. நாடார் என்றே அழைக்கப்பட்டார். ஆனால் ஜாதி ஒழிப்புக் கொள்கை மீது பெரும் நம்பிக்கை கொண்ட அவர் தன்னை காமராஜ் என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாம் அவரை பின்பற்ற வேண்டாமா?
உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காகும் செலவினங்களில் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்பதுதானே உண்மை?
சேணத்துக்கு வாயைப் பூட்டிக்கொள்ளும் குதிரை கொள்ளுக்கு மட்டும் வாயைப் பிளக்கலாமா?
@arivalayam
@INCTamilNadu
ஒன்றிய அரசின் கனரக தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி ஒரு மாபெரும் உண்மையினை வெளியிட்டு ஒரு கேள்வியையும் கேட்டுள்ளார்.
குஜராத்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலையினை
2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் மைக்ரான் டெக்னாலஜி எனும் அமெரிக்க கம்பெனி துவங்கியுள்ளது.
இந்த
இன்று பிரதமரை சந்திக்கபோகும் பாஜக தலைவர் முருகன் நயினார்நாகேந்திரன் வானதி சீனிவாசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினரகள் பிரதமரிடம்
1) நீட் தேர்வு ரத்து
2)தடூப்பூசி தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனத்தை மாநில அரசிடம் ஒப்படைத்தல்
3)மதுரைAIMS உடனடி பணிதுவங்கல்
குறித்து வலியுறுத்தவேண்டும்
தினகரன் அணி 5%வாக்குகள் பெற்றால் திமுக 180லிருந்து 200இடங்கள் வெற்றி பெறும்..
7%க்கு மேல் தினகரன் அணி வாக்குகள் பெற்றால் 100இடங்களுக்கு மேல் பாஜக-அதிமுக அணி டெப்பாசிட் இழக்கும்..
வாருங்கள் ஒரு கை பார்ப்போம்!
@TNCCITSMDept
@DMKITwing
அர்னாப்கோஸ்வாமியின் அயோக்கியத்தனங்களும்,.பொய்செய்திகளை ஜோடித்து வாக்காளர்களை ஏமாற்றியதுமான அந்தரங்க சதிகள் அம்பலமாகியுள்ளன.ராணுவ ரகசியங்களும், மத்திய அரசின் மிகமுக்கியமான நிர்வாக முடிவுகளும் இந்த ஏமாற்றுக்காரனுக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி?பிரதமர் பதில் சொல்வாரா?
விமானநிலையத்தில் தன்னிடம் இந்தியில் பேசிய CISF அதிகாரியிடம் தனக்கு இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசகேட்டுக்கொண்ட கனிமொழிMP யைப் பார்த்து அந்த அதிகாரி" நீயெல்லாம் இந்தியானா?" என்று கேட்டுள்ளார்.தமிழும், தமிழரும், தமிழ்நாடும் இனிமேல் இந்தியா இல்லையா?
@KanimozhiDMK
எங்கே நீ தவிர்க்கப்பட்டாயோ,
எங்கே நீ அவமானப்படுத்தப்பட்டாயோ,
அங்கே நீ கொண்டாடப்படுவதும்,
அங்கே நீ அதிகாரத்தில் அமர்வதும்,
காலத்தின் கட்டாயம்!
@INCTamilNadu
@IndianNationalC
கும்பகோணம் மிக்கேல் பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவி தற்கொலைக்கு மதமாற்ற
நிர்ப்பந்தம் காரணம் என்ற பாஜக பொய் குற்றச்சாட்டு மதவாத அரசியலின் ஆபாசம்!
1859 முதல் மூன்று நூற்றாண்டு நடக்கும் பள்ளி,
ஒன்றரை லட்சம் பிற்படுத்தப்பட்ட, விளிம்பு நிலை மாணவர்களுக்கு கல்வி தந்துள்ளது-1
சகோதரி வானதிக்கு ஒரு கேள்வி!
கோவா சட்டமன்ற தேர்தலில் 15 கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு பாஜக சீட் கொடுத்துள்ளதே-
அவர்களும் மதமாற்றம் செய்யப்பட்டவர்களா?
தமிழ்நாட்டில் கத்தோலிக்க கல்வி நிறுவனங்களை மூடவேண்டும்!
கோவாவில் அவர்கள் வாக்கு பாஜகவுக்கு வேண்டும்!
கோவா மக்கள் முட்டாள்களல்ல!
தேசிய ஊடகங்கள் என்று பெருமைப்படும் பல ஆங்கில தொலைக்காட்சிகள் தங்கள் எஜமான விசுவாசத்தை காட்ட போராடும் வேளாண் பெருங்குடி மக்களை குண்டர்களாகவும், ரவுடிகளாகவும் சித்தரித்து காட்ட எடுக்கும் முயற்சிகளைப் பார்க்கும் போது ஊடக தர்மம் வெட்கத்தால் தலை குனிகிறது!
8 டிகிரி கடும் குளிரில் சுமார் ஒரு கோடி விவசாயிகள் சாலைகளில் கிடக்கும்போது அதைப் பார்த்து மனம் பதறாத ஒரு பிரதமரை என்னவென்று அழைப்பது? இதயம் உள்ளவர்கள் இரங்குவார். கல் மனம் கொண்டோர் எப்படி இரங்குவர்? அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணிர் ஒரு நாள் நிச்சயம் நியாயம் கேட்க்கும்!
ஆட்சிமாற்றத்தின் அற்புதம் பாரீர்!
கொரோனா முன்கள பணியாளருக்கான பாதுகாப்பு கவச உடை..
எடப்பாடியார் அரசுக்கு அனிதா டெக்ஸ்காட் கம்பெனி விற்ற விலை₹330
அதே நிறுவனம் தளபதியார் அரசுக்கு விற்கமுன்வரும்விலை ₹130
ஒருஉடையில் ₹200 கமிஷனா?
இவர்களை சும்மாவிடலாமா?
@CMOTamilnadu
நமது எல்லையில் நமது வீரர்களை சீன இராணுவத்தினர் கொலை செய்யும்போது சீன கம்பனிக்கு ₹1800 கோடி ஒப்பந்தத்தை மோடி அரசு ஜூன் 13 அன்று எப்படி கொடுத்தது? இந்திய நிறுவனங்கள் டாட்டா, எல் & டி போன்றவைகளுக்கு கொடுக்காமல் சீனாவை ஆதரிப்பது எப்படி? இதுதான் தட்சார்பு பொருளாதாரம்!
என் அருமை நண்பர்,என் கல்லூரி தோழர்,புதுவை முதல்வர் நாராயணசாமி .அவரைத்தவிர வேறுயாரும் கவர்னர் கிரண்பேடியை சமாளித்திருக்க முடியாது.தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரின் மக்கள் பணியை முடக்குவது மட்டுமே கடமை என்று செயல்படும் அவரை முறியடித்து பட்ஜெட் தாக்கல் செய்த நாராயணசாமி வாழ்க!
தமிழக ஊடகங்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள். திரு. ரஜினி காந்த் அறிவிப்பை ஏற்று அவரை பற்றிய விவாதங்களுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். தி மு க வை தோற்கடிக்க பா ஜ க செய்த சதிக்கு அவர் துணை போக விரும்பவில்லை. அவருக்கு ஓய்வு தேவை.sir, get well soon!
இந்திய- சீனப் போரின் உச்சத்தில் பாராளுமன்றத்தில் ! விவாதிக்கவேண்டும் என்று வாஜ்பாய் கேட்டபோது பிரதமர் நேரு இரண்டு முழுநாட்கள் விவாதத்தில் பங்கேற்று 155 உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.இன்று சீன ஆக்கிரமிப்பு பற்றிய விவாதத்திற்கு அனுமதி மறுத்து பிரதமர் அவைக்கு வரவேயில்லை
"சரியான மாற்று"(alternative)என்ன என்பதி��ை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வரை மாற்றம் வராது என்று உணருங்கள்!
நானா?எனது கட்சியா? என்றால் எனது கட்சி!
எனது கட்சியா? நாடா? என்றால் எனது நாடு!
நாட்டை காப்பாற்ற கட்சி தியாகம் செய்யவேண்டிய நேரமிது!
காலம் வழங்கியிருக்கும் கடைசி வாய்ப்பு!2024!
தொலைக்காட்சி விவாதங்களின் மூலம் வெறுப்பை விதைக்கும் அர்னாப் கோஸ்வாமி டிவி தரவரிசையில் இடம்பிடிக்க தரவரிசை நிறுவனங்களை ஏமாற்றி மோசடி செய்ததாக மும்பை போலிசார் வழக்கு..அர்னாப் கைதாகலாம்... உப்பு தின்றால் தண்ணீர் குடிக்கக் தான் வேண்டும்!
பஞ்சாப் மாநிலத்திற்கு செல்லவிருந்த பிரதமர் விவசாயிகளின் சாலைமறியல் காரணமாக போகமுடியாமல் டெல்லி திரும்பியது துரதிர்ஷ்டவசமானது.பிரதமரின் பாதுகாப்பு குறைபாடுகளின் காரணங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.மிக முக்கிய எல்லை மாநிலத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலை மிக ஆபத்தானது!
புதிய கல்வி கொள்கையைப் பற்றிய கருத்துகேட்பு கூட்டத்திற்கு மாநில கல்வி அமைச்சர்களை புறக்கணித்துவிட்டு ,துறை செயலர்களை ,மத்திய கல்வி அமைச்சர் அழைப்பது அரசியல்சாசனசட்டத்திற்கு விரோதமானது. அக்கூட்டத்தை புறக்கணிக்க முடிவெடுத்த முதல்வருக்கு பாராட்டும் நன்றியும்!
@CMOTamilnadu
கொரோனா நிவாரண நிதியாக,கருணையுடன் 2 கோடி ரேஷன் அட்டைதார்ர்களுக்கு முதலமைச்சர் வழங்கும் ₹4000/ஐ, வாங்கும் பொதுமக்கள்,ரேஷன்கடைகளில் கூட்டமாய்கூடுவதை தவிர்க்கின்ற வகையில் அப்பணத்தை ஆதர்கார்டுகளோடு இணைந்த அவர்களது வங்கிகணக்கில் செலுத்துவதை தமிழக அரசு பரீசீலிக்கவேண்டும்
@mkstalin
சிவப்பு வட்டத்திற்குள் இருப்பவர்தான் செங்கோட்டையில் ஏறி கொடியேற்றியவர்.இவர் எப்படி விவசாயி��ள் மத்தியில் வந்தார்?போராட்டத்தின் பெருமையை சிதைக்க வந்த இந்த சதிகாரனை யார் அனுப்பியது? சதி விரைவில் அம்பலத்திற்கு வரும்!
தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காலத்தின் தேவையறிந்து எடுக்கப்பட்ட சரியான முடிவு.
டாஸ்மாக்கை மூடியதும் அம்மா உணவகங்களை திறப்பதும் முதலமைச்சரின் ஏழைகளின் மீதுள்ள கரிசனம். முதல்அலையின்போது அமுல்படுத்தப்பட்ட முரட்டுத்தனமான ஊரடங்காக இல்லாமல் மனிதநேயத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது
திராவிட இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சராவது சரியான அரசியல் முடிவு. முதலமைச்சரின் பணிச்சுமைகள் வெகுவாக குறையும். திராவிட இயக்க இளஞர்களின் அரசியல பயணத்திற்கு தேவைப்படுகின்ற தலைவராக அவர் இருப்பார். வருக! வாழ்க!வெல்க!
@mkstalin
@Udhaystalin
முத்தான ஐந்து அறிவிப்புகள் மூலம் அவரது அரசு ஏழை, எளிய மக்களின் நலம் நாடுகின்ற அரசு என்பதை உரக்கச் சொல்லியுள்ளார் நமது முதலமைச்சர்! கொரோனா சுனாமியால் வாழ்வு ஆதாரங்களை இழந்து நிராதரவாக இருக்கும் மக்களுக்கு ‘ நானிருக்கிறேன் உங்களுக்கு’என மார்தட்டி வருகிறார்.
@mkstalin
ஆர்ப்பாட்டம் இல்லாத ஆழமான கேள்விகள்,
கடுஞ்சொற்களையும் புன்னகையோடு உள்வாங்கிக்கொள்கிற நளினம்,
தேவைஇல்லாமல் தனிநபர் தாக்குதலை நடத்துபவர்களை உரிமையோடு கண்டிக்கும் லாவகம்,
மெத்தப்படித்த
பெரிய மனிதர்கள் தவறு பேசும்போது அதனை தட்டிக்கேட்கும் தைரியம்,
குணசேகரன்
மக்கள் மறக்கமாட்டார்கள்!
சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக அன்னை சோனியா காந்நி அவர்களால் நியமனம் பெற்றுள்ள அன்பு தம்பி செல்வப்பெருந்தகைக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் மது கடைகளை திறப்பதை உள்ளூர் பாஜகவினர் எதிர்ப்பது இரட்டை வேடம். மத்திய அரசு மது கடைகளை திறப்பதற்கு மாநிலங்களை அனுமதித்து விட்டு தமிழகத்தில் பாஜகவினர் யோக்கியர்கள் போல நடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது
@ptrmadurai
@arivalayam
@mkstalin
உலக பொருளாதாரம் அறிந்த ஒருவரை நிதி அமைச்சராக அமர்த்தி அழகு செய்துள்ளார் தளபதி. கண்ணிய அரசியலுக்கு பெருமை சேர்த்தார் உங்கள் தந்தையார். தமிழக வளர்ச்சிக்கு வாசல் திறந்த அமரர் சி. சுப்ரமணியம் போல நீங்களும் வரலாற்றில் இடம்பிடிக்கும் பெருமை பெற வாழ்த்துக்கள்.
மக்களவை இடங்களை 1000 ஆக உயர்த்தினால் தென்மாநிலங்களுக்கு பேரிழப்பு !சீனபாராளுமன்றத்தைபோல பிரதமர் பேசி உறுப்பினர்கள் கேட்கும் பொதுக்கூட்ட அரங்கமாக மாறி” விவாதமண்டபம்” என்ற ஜனநாயக உயிர்துடிப்பை இழக்கும். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்று திரண்டு முயற்சியை நிறுத்தவேண்டும்.
ஜமீஷா முபீன் வீட்டில் இருந்து கைப��பற்றப்பட்ட பென்டாயிரித்திரிட்டால் டெட்ராநைட்ரேட் & நைட்ரோ கிளிசரின் மிகவும் ஆபத்தான சந்தையில் கிடைக்காத வெடிபொருள்.அதன் தயாரிப்பு
& விநியோகம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே நடக்கிறது.குற்றவாளிக்குஎப்படி கிடைத்தது?
பாஜக பதில் சொல்லட்டும்!
முன்னேறிய வகுப்பு மாணவர்களுக்கான 10%இட ஒதுக்கீடு ஆணை மூன்றே நாட்களில் நடைமுறைக்கு வருகின்றது.மருத்துவகல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு 45 நாட்கள் போதாதாம்! அரசாங்கம் நடக்கிற லட்சணம்!
நீட் தேர்வுக்கு திமுகவும்,காங்கிரசும்
காரணம் என OPS-EPS பொய் சொல்லி வருகின்றனர்.ஒன்றியத்தில் மன்மோகன் சிங், மாநிலத்தில் கலைஞர், ஜெயலலிதா அரசுகள் இருக்கின்ற வரை நீட் தேர்வு இல்லை.பழனிச்சாமி-பன்னீர்செல்வம் ஆட்சி மாநிலத்திலும் ஒன்றியத்தில் மோடி ஆட்சியிலும்தான் நீட் வந்தது.
நேர்மை,திறமை, உழைக்க ஆர்வம் கொண்ட அதிகாரிகளை தேர்ந்தெடுத்து,முக்கிய பொறுப்புகளில் பணியமர்த்தியதிலும்,கொரோனா அதிகம் பாதித்துள்ள மாவட்டங்களுக்குபொறுப்பாளர்களக அமைச்சர்களை நியமித்ததிலும் முதலமைச்சர் கலைஞரின் நிர்வாகத்திறனையும்,விரைந்துமுடிவெடுக்கும் அவரது வேகத்தையும் பிரதிபலிக்கிறர்
மத்திய அரசு உ . பி க்கு மட்டும் ரூ.8255 கோடி ஒதுக்கி விட்டு, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா கேரளா அனைத்துக்கும் ரூ.7376 கோடி ஒதுக்கி தெனிந்தியாவுக்கு அநீதி செய்கிறது. திரு. ஸ்டாலின் இதனை கேட்டால் தேவையற்ற பிரச்சினை என்கிறார் ஓ. பி எஸ். அவமானம்.
தமிழகத்தை வன்முறைக் களமாக்க, சமூக அமைதியைக் கெடுக்க,தொழில் முதலீடுகளைத் தடுக்க நண்பர் அண்ணாமலை செய்யும் மக்கள் விரோத அரசியலின் ஒரு கருவிதான் இந்த முன்னாள்ராணுவ நபர்.
முள்மரத்தை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
தேசப்பதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை தேவை.
@CMOTamilnadu
ஒரு காலத்தில் இந்தியாவில் உச்ச நீதி மன்றம் இருந்தது.அது தேசத்தின் மனசாட்சி எனவும், அரசியல் சாசன சட்டம் தந்த உரிமைகளின் பாதுகாவலர் என்றும், தடம் புரண்ட அரசுகளிடமிருந்து மக்களை காக்கும் காவலர் என்றும் அழைக்கப்பட்டு அச்சமின்றி சுதந்திரமாக செயல் பட்டு நீதி செய்தது.
டீசல் விலை ₹90 தாண்டுகிறது. பெட்ரோல் ₹100 தொடப்போகிறது.
ஒரேஆண்டில் ₹22 விலை உயர்த்திய “தர்மபிரபுவின்” ஆட்சி தொடரட்டும்.2012 ம் ஆண்டில் லிட்டருக்கு ₹4 உயர்ந்நதால் அன்றையபிரதமர் மன்மோகன் சிங் அவர்களை பாஜகவினர் “கோழை” என்றும் “கையால் இயலாத பிரதமர்”
என்றழைத்ததை மறப்பொம்!
பருப்பு கொள்முதலில் மட்டும் அதிமுக அரசு அடித்த கொள்ளை ₹120 கோடி!கிறிஸ்டி
நிறுவனம் அதிமுக அரசிடம்பருப்புக்கு வைத்தவிலை₹146.50.
திமுக ஆட்சியில் ஒளிவுமறைவற்ற டெண்டரால்
அதே நிறுவனம் கேட்கும் விலை கிலோ₹87.ஒரு டெண்டரில்₹120 கோடிஎன்றால் ஆட்சி முழுவதும் எவ்வளவு அடித்திருப்பார்கள்?😳
தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிரதமர்,உள்துறை அமைச்சர சந்திப்பதுஆளுநர்மாற்றம் பற்றிய யூகங்களை எழுப்பியுள்ளது. அது உண்மையானால் புதிய ஆளுநர் நியமனம் பற்றி பிரதமரும் உள்துறை அமைச்சரும் முதலமைச்சரிடம் ஆலோசித்த பின்பே நியமனம் செய்யவேண்டும். அதுதான் கூட்டாட்சி த்த்துவம்!
@CMOTamilnadu
ஆந்திராவில் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களது வெற்றி பாராட்டத்தக்க ஒன்று.ஆணவமும்,அரைவேக்காட்டுத்தனமும் நிரம்பியிருந்த ஜெகன்,மோடியோடு சேர்ந்துகொண்டு ஆடிய தப்பாட்டத்திற்கான தண்டனையினை பெற்றுள்ளார்.
இந்திய அரசியலில் ஒரு மகத்தான மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பினை காலம் சந்திரபாபு
அதிமுக அவைதலைவர் பெரியவர் மதுசூதன்ன் மறைவுக்கு,கிருஷ்ணகிரியிலிருந்து இரவு முழுவதும் பயணித்துவந்து , அதிகாலையில் அவர் இல்லம் சென்று நேரில அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் தளபதியார் பண்பட்ட கலாச்சாரத்துக்கும், நாகரீக அரசியலுக்கும் அடையாளமாக நிற்கின்றார்!அமர்ர் மதுசூதனுக்கு அஞ���சலி!
இந்திய வரலாற்றில் தடுப்பு மருந்தினை மக்களுக்கு அளிக்கும் பொறுப்பினை மாநிலரசுகள் மீது சுமத்திய முதல் அரசு மோடி அரசு.போலியோ,காசநோய் தட்டம்மை,காலரா, மலேரியா, குழந்தைகள் சொட்டுமருந்து என அனைத்தையும் மத்திய அரசு மக்களுக்கு இதுவரைவிலையில்லாமலேயே வழங்கியது. இது மோடிஜியின் புதிய இந்தியா!
வஞ்சகம்தான் வாழுமெனில்..
வன்முறைதான் வெல்லுமெனில்.
அன்பும்,தியாகமும் தோற்குமெனில்,
அந்த தேசத்திற்கு ஐயோ கேடு!
போய் வாருங்கள் தந்தையே!
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும!
அருள்தந்தை ஸ்டான்ஸ் சுவாமி நீதிமன்ற காவலிலேயே இறந்தார்!
மதுரை உயர்நீதிமன்றம் அதனது தீர்ப்பால் தமிழக அரசை சவுக்கால் அடித்துள்ளது.தமிழே அறியாதவர்கள் தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு தமிழக அரசின் அணுகுமுறைகளே காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.தமிழகத்தின் நலனைப் பலிகொடுத்துதான் பதவியில் இருக்கவேண்டுமா?நம் தலைவிதி!
ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் பொது ரகசியமாக உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த 30 அருமையான காடுகளை தனியாருக்கு தாரை வார்திருக்கிறது மத்திய அரசு!(தி ஹிந்து 24/5/20).
கேட்பாரில்லை?
எங்கே நீ தவிர்க்கப்பட்டாயோ,
எங்கே நீ அவமானப்படுத்தப்பட்டாயோ,
அங்கே நீ தவிர்க்கப்பட
முடியாதவனாகவும்,
மதிக்கப்பட வேண்டியவனாகவும்,
மாறுவதுதான் உன் வாழ்வின்
வெற்றி!
இந்திய பாராளுமன்றத்தின்
“நிழல் பிரதமராக”
பொறுப்பேற்றிருக்கும் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!
இது
அமித்ஷா அவர்களது அருமை மகன் ஜெய்ஷாவின் இந்திய கிரிக்கெட் வாரியம், கோடிகளை அள்ளும் ஐபிஎல் போட்டிகளுக்கு சீன கம்பெனிகள் நிதிஉதவி செய்ய மத்திய அரசு அனுமதி கொடுக்குமாம்! மற்ற இந்தியர்கள் சீனப்பொருட்களை புறக்கணித்துவிட்டு டிக்டாக் செயலியை அழித்துவிடவேண்டுமாம்!
அது அப்போ!இது இப்போ!
தம்பி ஷா நவாஸ் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.உங்களைத்தேர்நதெடுத்த எழுச்சித்தமிழருக்கு மனம்நிறைந்த பாராட்டுக்கள்.உங்களைப்போன்ற சிந்தனைத்தெளிவும்,விரிந்தபார்வையும்,அறிவாற்றலும்,எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் கொண்ட இளைஞர்கள் சட்டமன்றத்திற்கு தேவை.வென்று வருக!
இன்று காலை , மறைந்த அருள் தந்தை ஸ்டேன்ஸ் சுவாமி அவர்களின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்த வந்த , சிறுபான்மை மக்களின் காவலர், நமது மாண்புமிகு முதல்வர் அவர்களுடன்..
எங்கள் பிரதமரே, கனவு உலகின் கற்பனை கதவுகளை திறந்து நிஜ உலகின் உண்மைகளை பாருங்கள். உறங்க வீடும் உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாத கோடிக்கணக்கான இந்தியர்கள் எங்கே போய் விளக்கு ஏற்றுவார்கள்?
அலுவலகம் தேடி வந்த திராவிட இளவல்..
நெஞ்சம் நிறைய அன்பு..
முகம் நிறைய புன்னகை..
தாத்தாவும், தந்தையும் சேர்ந���து வந்தது போன்ற உணர்வு..
எளிமையும், பண்பும், பாசமும் கொண்ட ஒரு தலைவன் உருவாவதை பார்த்தேன்..
பரவசமானேன்..
@arivalayam
2018-2019 இல் ₹2410 கோடியாக இருந்த பாஜக வின் வருடவருமானம் 2019-2020இல் 50% உயர்ந்து
₹3623 கோடியாக உயர்ந்துள்ளது!
தேசம் முழுவதும் கொரோனாவால் முடங்கிக்கிடந்தபோது பாஜகவின் கஜானாவில் மட்டும் பணமழை பெய்கிறது! அந்த ₹3623 கோடி யார் கொடுத்தது?😳
தமிழக அரசின் நிதி நிலையை விளக்கும் அரசின் வெள்ளை அறிக்கை சொல்வது என்ன?
தமிழ்நாட்டுக்கு..
ஜெயலைதாவின் ஆட்சி.. போதாத காலம்,
எடப்பாடிபழனிச்சாமி ஆட்சி.. பொல்லாத காலம்,
மோடியின் ஆட்சி.. கொடுமையின் காலம்.
வேறு என்ன சொல்ல?
இந்தியாவின் மிக சிறந்த மாணவர்கள் பயிலும் IIT-Madaras இல் சாதி வெறி என்பது பெரும் அவமானம், கல்வி என்பது பட்டங்கள் மட்டுமல்ல. அது ஒரு விசால பார்வை. விஞ்ஞான அணுகுமுறை. அதை தர முடியாத IIT இருந்தால் என்ன? அழிந்தால் என்ன?
மாநிலங்களவையை ஞாயிறு காலை கூட்டவேண்டிய அவசரம்என்ன? விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்க வகைசெய்யும் மசோதாக்களை உறுப்பினர்கள் வாக்கெடுப்பு கேட்கின்றபோது வாக்கெடுப்பின்றி குரல் ஓட்டு மூலம் நிறைவேற்ற எந்த விதி அனுமதிக்கின்றது? பாராளுமன்ற ஜனநாயகத்தின் கறுப்பு நாள்.வெட்கம்!
ஏழு மாதங்களில் 42000 மில்லிலிட்டர் தனது தாய்ப்பாலை அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் இல்லாமல் அவதியுறும் ஏழைக்குழந்தைகளுக்கு வழங்கிய பொறியியல் பட்டதாரி சிந்து மோனிக்கா,
அவரை ஊக்குவித்த அவரது அன்புக்கணவர் மகேஸ்வரன் ஆகியோருக்கு கரம் குவித்து நன்றி சொல்வோம்! மனிதம் இன்னும் மடியவில்லை
ஒரு உறுப்பினர் கேட்டால் கூட வாக்கெடுப்பு கண்டிப்பாக நடத்தவேண்டும் என்பது விதி.ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கேட்கும்போது அவைத்தலைவர் எப்படி மறுக்கமுடியும்?பாராளுமன்றத்தின் ஜீவனைக் கொன்று விட்டு புதியபாராளுமன்ற கட்டிடம் எதற்காக?"பெற்ற தாய் பட்டினி.பிள்ளை கோதானம் கொடுத்தாராம்"பழமொழி
நம்பிக்கை இழந்து நின்ற தேசத்தில் நம்பிக்கை விதைகளை விதைத்து,
வெறுப்பின் வேரகற்றி அன்பு பயிர் வளர்த்து,
தனிமனித ராணுவமாக நாடு முழுவதும் வலம் வந்து,
ஜனநாயகம் காத்து,மத நல்லிணக்கம் வளர்த்து,
மனிதநேயம் போற்றி,
தாய்நாட்டின் மானம்காத்த மாவீரன்…
@INCIndia
@INCTamilNadu
பாசிசத்தின் வேர்களை நீர் ஊற்றி உரம் போட்டு வளர்த்த அதிமுக ஆட்சியின் ஒரு வெளிப்பாடுதான் மதுரை சம்பவம். தமிழக அரசின் சரியான நடவடிக்கை மற்றsleeper cell களுக்கு எச்சரிக்கை!
@cmotamilnadu
"இந்து மத மாணவர்களை நெற்றியில் திருமண்,குங்குமம் அணியக்கூடாது,
கிறிஸ்தவ மாணவர்களை கழுத்தில் சிலுவை அணியக்கூடாது,
இஸ்லாமிய மாணவர்களை ஹிஜாப் அணியக்கூடாது,
சீக்கிய மாணவர்கள் டர்பன் அணியக்கூடாது " என்று சொல்வதற்கு இந்திய அரசியல் சாசன சட்டம் எந்த அரசுக்கும் அதிகாரம் தரவில்லை!
5 லட்சம் கோடி கடன்.நாளொன்றுக்கு₹ 175 கோடி வட்டி !இருந்தும்
பொட்ரோல் விலையினை ₹3 குறைத்ததும் , நகர்புற வேலை திட்டத்தை அறிவித்ததும்,எந்த துறைக்கும் கடந்த ஆண்டைவிட ஒதுக்கீட்டை குறைக்காமல் இருந்ததும் முதல்வரின் நெஞ்சின் ஈரமும், ஏழைகளின் மீதுள்ள கரிசனம்நிறைந்த கருணையால் மட்டுமே!
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் கொரோனாவால் டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகமாகிவிட்டதால் ஆன்லைன் மோசடிகள் கூடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.நீங்களும் , பிரதமரும் தானே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எல்லாமே ஆன்லைன் ஆகிவிட்டால் பாதுகாப்பு என்று சொன்னீர்கள்!மக்கள் என்ன முட்டாள்களா?
ராஜ்பவன் என்ன உச்சநீதிமன்றமா? உயர்நீதிமன்றமா?இவர்கள் இருவரும் கேட்டவுடன் கொலைவழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க!
மேல்விசாரணைக்கு உத்தரவிட்டது மாவட்ட அமர்வு நீதிமன்றம்!
அது தவறு என்றால் மேல்முறையீடு செய்து தடைஉத்தரவு வாங்கவேண்டியதுதானே!
யாரை ஏமாற்ற இந்த நாடகம்?
@arivalayam
2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் வடிவமைத்த 18 நிலை " உரை கிணறு". பண்டைய இந்திய கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க இந்திய அரசு அமைத்த குழுவில் இந்தத் தமிழனுக்கு ஒரு இடம் இல்லை! இறைவா! எங்களுக்கு ஏன் இந்த சோதனை?
அது எப்படி பல்லாயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்யும் கம்பெனிகளெல்லாம் குஜராத்தை சேர்ந்த கம்பெனிகளாகவே இருக்கின்றன?2017ல் தெரிந்த மோசடிமீதுவழக்கு பதிய ஐந்து வருடமா?இவர்கள் எந்த கட்சிக்கு நன்கொடை கொடுத்தார்கள் என்பதை எப்படி தெரிவது?
@arivalayam
@INCTamilNadu