ஜெய்பீம் படம் பார்த்தேன்.காவல்துறையால் பாதிக்கப்பட்ட ஒரு பழங்குடி குடும்பத்தின் துயரத்தை,துன்பத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள். அன்புமணியின் கேள்விக்கு உங்கள் பதில்ஏற்புடையது அல்ல.திருத்துங்கள் சூர்யா,இல்லையெனில் காலம் உங்களை திருத்தும்.
பாட்னாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தில் உணவு இடைவேளையில் தேசிய மகளிர் அணி தலைவி திருமதி.வானதி சீனிவாசன்,சிறுபான்மை அணி தேசிய செயலாளர் திரு.வேலூர் இப்ராஹிம்,மாநில இளைஞர் அணி தலைவர் திரு.ரமேஷ் சிவா உள்ளி்ட்டோருடன் ஒரு இனிய கருத்துப் பரிமாற்றம்.
பாரதப்பிரதமரை டெல்லிக்கு வழியனுப்ப விமானநிலையத்தில் காத்திருந்தபொழுது, அண்ணன் எடப்பாடியோடு 60 ஆண்டுகால
போராட்ட அவினாசி-அத்திக்கடவு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதை பகிர்ந்துகொண்டோம்.
ஓர் உண்மையான விவசாய முதல்வரை தமிழகம் தவறவிட்டது என்பதே உண்மை,போலி விவசாயின் ஆர்ப்பாட்டத்தால்.
ஒரு மாதம் அமெரிக்கா,லண்டன் சுற்றுப்பயணம்.மகன்களின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வேண்டும்.கோர்ட்டும் சூட்டும் போட்டே ஆகணுமாம்.ஒரு மாதம் வேஷ்டி சட்டைக்கு விடுமுறை தான்.
இரண்டு IPS-களுக்கு நடுவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த பாரதப்பிரதமர்.
சென்னையில் பாரதப்பிரதமரை டெல்லிக்கு வழியனுப்பியபொழுது, விவசாயிகள் மாநாட்டிற்கு வரவேண்டுமென்று அழைப்பு விடுக்க,மாநில தலைவரும் ஆமோதிக்க Yes, I’ll Come என்றார் பாரதப்பிரதமர்.தயாராகிறது விவசாய அணியின் பச்சைத்துண்டு படை
தேச பக்தர் ரத்தன் டாடாவுக்காக…
இந்திய அரசுக்கு கொரோனா கொடுந்துயரில் 1500 கோடியை அள்ளிக்கொடுத்த இந்தியரால் உருவாக்கப்பட்ட இந்திய தயாரிப்பை வாங்குவதில் பெருமை.
TATA Harrier Red Dark Edition சாவியை வழங்கும் SGA motors இயக்குனர் திரு.அர்புதராஜ், TATA TSM திரு.நயினார்.
எங்களது இளைய மகன் கௌசிக்கரண் அமெரிக்கா அட்லாண்டாவின் புகழ் பெற்ற ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
யுனிவர்சிட்டியில் MS Robotics(Post Graduate) பட்டம் பெற்ற நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்த தருணம்.
கேரள சோதனைச்சாவடி குமுளியில் கண்ணகி கோவிலுக்கு செல்லும் பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்திய கேரள வனத்துறை அதிகாரி,வேடிக்கை பார்த்த தமிழக காவல்துறை.
பா.ஜ.க விவசாய அணி சார்பில் சாலை மறியல் செய்யப்பட்டது...
பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் 38-வது பிறந்தநாளை முன்னிட்டு,விவசாய அணிசார்பில் கோவை அரசு மருத்துவமனையில் இன்றுபிறந்த 10 குழந்தைகள் உட்பட 38 குழந்தைகளுக்கு வெள்ளிக்காப்புஅணிவிக்கப்பட்டு, அன்னதானமும் மக்களுக்கு வழங்கப்பட்டது.அவர் நீடூழிவாழ கோவிலில் சிறப்புபூஜை செய்யப்பட்டது
தலைவரின் கையால் வாகனத்தில் தாமரைக்கொடி பொருத்தினால்தான் பயணம் தொடரும் என ஆறுமாத காலம் காத்திருந்த காஞ்சிபுரம் விவசாய அணி மாவட்ட தலைவி திருமதி.ஸ்ரீதேவி காரில் இடைவிடாது தொடர்பணியிலும் நேரம் ஒதுக்கி கொடி பொருத்தி தேசைப்பணியை துவக்கி வைத்த உன்னததலைவர் திரு.அண்ணாமலை அவர்கள்.
காவல்துறையின் திட்டமிட்ட மெத்தனத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனத்தை விட்டு இரண்டு கிலோமீட்டர் நடந்து வந்து மோகனூர் ஸ்ரீ வள்ளியம்மன் நம்பியண்ணன் பொங்கல் விழாவில் பங்கேற்று எத்தனை தடைகள் வந்தாலும் உங்களோடு நான் இருக்கிறேன் என உறுதியளித்த திரு.அண்ணாமலை அவர்கள்.
இதுவன்றோ தலைமைக்கு மாண்பு
மாநில தலைவரை வரவேற்க காத்திருந்த மூத்த தலைவர் திரு.வெள்ளியங்கிரி ஐயா அவர்களின் 35 ஆண்டு காலம் சேவையை சொல்லி அறிமுகப்படுத்தியவுடன்,கணம் தாமதிக்காமல் அவருக்கு பொன்னாடை போர்த்தி வணங்கி நின்றார் பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை IPS.
கோவையில் மக்கள் வெள்ளத்தில் மழைத்தூவி ஆசீர்வதிக்க, பொன்னாடை போர்த்தி உங்கள் பயணம் சென்னை கோட்டையில் முதலமைச்சர் இருக்கையில் அமர்வதாக அமையுமென்று வாழ்த்தி பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை IPS அவர்களை வழியனுப்பினேன்.
@annamalai_k
உண்மையைத் தானே சொன்னார் அண்ணாமலை.
அமைச்சர் .உதயநிதி சனாதனத்தை அழிப்பேன் என்று முழங்கும்போது அதற்கு அடிப்படையாக அண்ணாவும்,பெரியாரும் பேசிய வரலாற்று உண்மைகளை மக்களிடம் கொண்டுசெல்வது, தமிழகத்தின் பண்பாட்டை, கலாச்சாரத்தை பாதுகாக்கும் பாஜகவின் கடமை.பாஜகவின் பொறுமைக்கும் எல்லை உண்டு.
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் விமான விபத்தில் பலியான இந்திய முப்படைத்தளபதி பிபின் ராவத் மற்றும் 13 வீரர்களுக்கும் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மலர்வளையம் வைத்து பாஜக மாநில,மாவட்ட நிர்வாகிகளுடன் அஞ்சலி செலுத்தினேன்.
சன் டிவியின் திராவிட உருட்டாளர்கள்!!
சன் டிவி விவாதத்தில் காஷ்மீரை காப்பாற்ற RSS ஆற்றிய அரும்பணி குறித்து பேசியபோது நீங்கள் கூறுவது பொய் மூன்றாம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் கூட வரலாறு இருக்கிறது என்று கூறி நெறியாளர் உட்பட ஐந்து பேர் என் மீது பாய்ந்தார்கள்.
அரவக்குறிச்சி சட்டமன்றத்தேர்தலில் வெளிமாவட்டங்களிலிருந்து வந்து,தங்கி பிரச்சாரம் செய்த பாஜக நிர்வாகிகளின் பணி மிகவும் பாராட்டத்தக்க வகையில் இருந்தது.
வேட்பாளர் திரு.அண்ணாமலை, சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர் திரு.G.K.நாகராஜ் ஆகியோர் வெளிமாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த தருணம்.
மாநிலத் தலைவரோடு அயலக சுற்றுப்பயண நிகழ்வுகளை இனிப்புடன் மகிழ்ந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.
லண்டன் மாநகரில் மாநிலத்தலைவர் செய்த சிறப்பு ஏற்பாடுகள் எங்கள் பயணத்தை இனிமையாக்கியது.
தமிழக மக்களின் நலனை மறந்து தன் குடும்ப நலனை பற்றி மட்டுமே சிந்திக்கின்ற கட்சி திமுக.
தன் குடும்பத்தை துறந்து,மறந்து தேசத்தை நேசிக்கின்ற கட்சி பாஜக.
-G.K நாகராஜ் BJP.
எங்கள் மகன் டாக்டர். சுதிர் விக்னேஷ்வர், இன்று உலகின் முதல் 10 பல்கலைக்கழகங்களில் ஒன்றான லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் (UCL) MSc மருத்துவ நரம்பியல் அறிவியலில் சிறப்புப்பட்டம் பெற்ற பட்டமளிப்பு விழாவில் ஒரு பெற்றோராகக் கலந்துகொண்டு வாழ்த்தியதில் மகிழ்ச்சி.
சர்வதேச தரத்தையும் மிஞ்சிய ரத்தன் டாடாவின் படைப்பு!!..
@RNTata2000
வின் TATA Harrier மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
காரின் உயர் தொழில்நுட்பம்,பாதுகாப்பு,வடிவமைப்பு stability and safety very excellent.
பாராட்டுக்கள்
@RNTata2000
அவர்களுக்கு.
இந்திய படைப்புகளை வாங்குவோம்...
பத்மஸ்ரீ பாட்டி பாப்பம்மாள் அம்மையாரின் மதி நுட்பம்.இந்த 107 வயதிலும் பாரதபிரதமர் மீது நான் அளவற்ற அன்பு வைத்திருக்கிறேன்.அவரும் என்மீதும் வைத்திருக்கிறார் என்றார்.பாட்டியிடம் நடந்த உரையாடல் நகைச்சுவையாகவும் கலகலப்பாகவும் இருந்தது.
இந்த வயதிலும் அவரது மதி நுட்பம் மலைக்க வைத்தது.
கொங்கு மக்கள் பெயரில் அரசியல் கட்சி நடத்தி,திமுக சின்னத்தில் வெற்றிபெற்று கொங்குநாட்டின் உயிர்நாடித்திட்டமான அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர முயற்சி எடுக்காத ஈஸ்வரனுக்கு அத்திட்டம் குறித்துப்பேச அருகதியில்லை.
பணத்தையும், பரிசுகளையும் பட்டுவாடா செய்து 5
கட்சி மாறிய அமாவாசை அமைச்சர்களை அடியாட்களாக வைத்துக்கொண்டு திமுக பெற்ற வெற்றிக்கு தமிழக முதலமைச்சர் வெட்கித்தலைகுனிய வேண்டும்.
சிங்கிளாக சிங்கமாய் நின்று, தன்னம்பிக்கையோடு,தனித்தன்மையோடு தன் வாக்குவங்கிக்கு அடித்தளமிட்டிருக்கிறது பாஜக.
அமெரிக்கா அட்லாண்டா மாகாணத்தில் அழகிய ஸ்ட்ராபெரி தோட்டத்தில் பழங்களைப் பறித்து அங்கு அவற்றை உண்டு மகிழ்ந்த தருணம். 200 ஏக்கர் பரப்பளவு உள்ள அந்த ஸ்ட்ராபெரி தோட்டத்திற்கு பல பள்ளிகளிலிருந்து பள்ளிக்குழந்தைகள், மாணவர்கள்,சுற்றுலாப்பயணிகளும் பங்கேற்று பழத்தைப் பறித்து மகிழ்கிறார்கள்
சன் டிவியின் விவாதத்தில் காஷ்மீரைக்காப்பதில் ஆர்.எஸ்.எஸ்.பங்கு குறித்து பேசியபோது வரலாற்றைப் படியுங்கள் என்றார் நெறியாளர் குணா.உண்மை வரலாற்றை அனுப்பியுள்ளேன்.மீண்டும் விவாதிக்க சன் டிவி தயாரா?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் எதிரொலியாக -“அன்னூர் அருகே தொழிற்பூங்காவிற்கு எக்காரணத்தைக் கொண்டும் விவசாயம் செய்துவரும் நிலங்களை விவசாயிகள் விருப்பமின்றி எடுப்பதில்லை என்று அரசு முடிவெடுத்துள்ளது” என்ற ஆ.ராசாவின் பேச்சு வரவேற்கத்தக்கது.
அரவக்குறிச்சியைச்சார்ந்த 25-க்கும் மேற்பட்ட பட்டியல் இனமக்கள், மக்கள்நீதிமன்றத்தின் வார்டு கவுன்சிலர்,திமுகவின்நிர்வாகிகள் உள்ளிட்டோர் பிரதமரின் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் முன்னிலையிலும், எனது முன்னிலையிலும் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.
தி.மு.க.வில் மகளிர் அணித்தலைவி, பஞ்சாயத்து தலைவி என பல பதவிகள் வகித்து தனது 105 வயதில் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பாட்டி பாப்பம்மாள் விவசாயத்தில் கும்பிடு மட்டும் தான் மிச்சம், மாறி மாறி கைமாற்றி சம்பாதிப்பது இடைத்தரகர்கள்தான் என கவலைப்பட்ட போது.
#bjp
#FarmersLaws
உள்ளூர் மக்கள் பிரச்சனையை தீர்க்க நினைத்தாலும் வி.சி.க. கட்சித்தலைவர்கள் பணம் பறிக்கும் நோக்கத்தில் நடைபெறாத வன்முறை சம்பவங்களையெல்லாம் அதை காணொளியாக சித்தரித்து சமூக நல்லிணக்கத்தை கெடுக்கிறது என்று கவுந்தப்பாடி காவல்துறை துணைகண்காணிப்பாளர் முன்பாக உண்மையை எடுத்துரைத்த விவசாயி
பாஜக தேசிய தலைவர் திரு.JP நட்டா அவர்கள் இன்று கலந்து கொள்ளும் கோவை பிரச்சார பொது கூட்ட இடத்திற்கு வருகை புரிந்து ஏற்பாடுகள் குறித்து உரிய ஆலோசனை வழங்கிய முன்னாள் மாநில தலைவர் திரு
@CPRBJP
அவர்கள்...
திரு.அண்ணாமலை அவர்கள் ஓய்வில்லாத கட்சிப்பணிக்கிடையிலும் கிடைக்கும் சிறுசமயத்திலும் தன்குழந்தைச்செல்வங்களோடு சற்று நேரமாவது பேசி மகிழ விரும்புவார்.கி.ராஜநாராயணன் அவர்களின் அரிய கதைபொக்கிஷமான “நாட்டுப்புற கதைக்களஞ்சியம்” என்ற நூலை அவரது சென்னை இல்லத்தில் அன்புப்பரிசாக வழங்கினேன்.
நீலகிரி கூடலூர் பந்தலூரில் ஐந்து ஜோடிகளுக்கு இந்து முறைப்படி கோ பூஜையுடன் முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக மாங்கல்யம் கொடுத்து அவர்கள் இல்வாழ்க்கையை துவக்கி வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
ராஜ்குமார் சாகர் எம்.பி அவர்களின் இல்லத்திருமண விழா டெல்லியில் நடைபெற்றது. முக்கிய விருந்தினர்கள் மாப்பிள்ளை ஊர்வலத்தில் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்க வேண்டுமாம்.
தமிழக விவசாய அணி சார்பாக கலந்துகொண்டு எங்கள் பங்குக்கு ஒரு ஆட்டத்தை போட்டு தமிழக கலாச்சாரத்தை பிரதிபலித்தோம்.
திருவாசகம் முற்றோதல் நிகழ்விற்கு முன்னதாக நடைபெற்ற கணபதி ஹோமத்தில் அதிகாலை 5 மணிக்கு 200-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்துகொண்டு தெய்வங்களை வரவழைக்கும் ஆவாகன நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.நூறுநாள் வேலைவாய்ப்புத்திட்டத்தை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன்.பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.திருக்குறள் புத்தகத்தை அன்போடு ஏற்றுக்கொண்டார்.
காசி தமிழ் சங்கம் சார்பில் மங்கை வள்ளி கும்மியை சார்ந்த 80 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் காசி சென்று காசி விஸ்வநாதரை தரிசிக்க மத்திய அரசு செய்திருந்த மிகச்சிறப்பான ஏற்பட்டிருக்கு பெருந்துறையில் நடைபெற்ற விழாவில் பாரத பிரதமர் அவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தார்கள்.
அறிவியல் சார்ந்த ஆன்மீகத்தை அறிந்திட மணிப்பூருக்கு உதவிட வேண்டும். வெளியுறவுத்துறை இணை அமைச்சர் விருப்பம்.அதற்கு உதவிக்கரம் நீட்டிய திரு.அண்ணாமலை.ஈஷா வருகைபுரிந்து ஒரே நாளில் அமைச்சருக்கு புரிந்த ஆன்மீக உண்மை திராவிடியன் ஸ்டாக்குகள் புரிந்துகொண்டால் தமிழத்திற்கு நன்மையே.
சமீபத்தில் சென்னையில் உணவகத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பாஜ மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை அருகில்அழைத்து, அவரோடு புகைப்படம் எடுத்துதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அன்புச்சகோதரி ஸ்வாதி. மாற்றுத்திறனாளிக்கும் புரிந்திருக்கிறதுஇவர் தமிழகத்தின் மாற்றத்திற்கான தலைவர் என்று!
அமெரிக்கா சிகாகோவில் விவேகானந்தர் பேசிய மேடையில் நின்றபோது,சிஸ்டர்ஸ் & பிரதர்ஸ் ஆஃப் அமெரிக்கா என்று சிகாகோவில் செப்டம்பர் 11,1893-ல் சுவாமி விவேகானந்தர் புகழ்பெற்ற உரைநிகழ்த்திய மேடையில் நின்று,அவர் நினைவைக்கூர்ந்தபோது மெய்சிலிர்த்துப்போனேன்.பிறவிப்பயன்பெற்ற பெருமை அடைந்தேன்.
கோவை ஜென்னி ரெசிடென்சியில் நடைபெற்ற நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திரு.N. கார்த்திகேயன், கொங்கு பேரவை தெற்கு மாவட்ட செயலாளர் திரு காளிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டார்கள்.
தமிழக முதல்வர் ஈரோடு வருகையின்போது அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற போராட்டம் செய்யக்கூடாது என கூறிய காவல்துறையின் தடையையும் மற்றும் திமுகவினரின் எதிர்ப்பையும் மீறி,அதிரடியாக போராட களம் இறங்கிய ஈரோடு மாவட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றி!
திருப்பதி பெருமாளின் திவ்ய தரிசனம் கிடைக்கப்பெற்று இந்தியாவின் முதல் குடிமகள் மேதகு ஜனாதிபதி திரௌபதி முர்மு அம்மையாருக்கும்,மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களுக்கும் பெருமாளின் அருளோடு பிரசாத்தை வழங்கினேன்.
கோவை அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து, விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திராவிட அரசால் அன்னூரில் கைப்பிடி மண் கூட எடுக்க முடியாது என்று உறுதியளித்தேன்.
ஆ.ராசாவைக் கண்டித்துப்பேசிய பாஜக மாவட்ட தலைவர் திரு.உத்தம பாலாஜியை காலை 6 மணிக்கு கைது செய்ததைக் கண்டித்து, நியாயம் கேட்ட பாஜக நிர்வாகிகள் கைதுசெய்து வைக்கப்பட்டுள்ளனர். ஆ.ராசாவை கைதுசெய்யாமல் பாஜக நிர்வாகிகளை கைதுசெய்து,துன்புறுத்துவது திராவிட மாடல் அரசின் உச்சகட்ட அராஜகம்.
தமிழக அரசு தேங்காய் எண்ணெய்யை பாமாயிலுக்கு மாற்றாக ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு நாளை 27-ம் தேதி பாஜக விவசாய அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள து.
எங்கள் இல்லத்திலும்,தோட்டத்திலும் பறக்கும் தாயின் மணிக்கொடி பாரீர்! பட்டொளி வீசி பறக்கட்டும் உங்கள் இல்லத்திலும்,பாரத அன்னையின் புகழ் ஓங்குக!
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.
கோவை பாராளுமன்றத்தேர்தல் அலுவலக கட்டுமானப்பணி போர்க்கால அடிப்படையில் அவிநாசி ரோடு சித்ரா அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அருகில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மருத்துவர் அய்யா அவர்களை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து அனைத்து சமுதாய பேரியக்கத்தில் அவருடன் பயணம் செய்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து மகிழ்ச்சி அடைந்தோம்.
நாளை 85 வது அகவை காணும் அய்யா அவர்கள் நூறாண்டு காலம் வாழ வாழ்த்த வயதில்லாததால் வணங்கிப் போற்றினேன்.
பெல்காமில் நடைபெற்ற விவசாய அணி தேசிய செயற்குழு கூட்ட பேரணியில் வந்தே மாதரம்,பாரத் மாதாகி ஜெய் என்ற கோசத்தோடு தேசிய மற்றும் மாநில நிர்வாகிகளுடன் பேரணியாக சென்ற மகிழ்ச்சியான தருணம்.
பஞ்சாபிலும் பாஜக வலிமை பெற்று வருகிறது.நல்லாட்சி தரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
Farmers will visit conference in hundreds of bullock carts and express the gratitude "Jallikatu hero" Narendra Modi. I visited the meeting ground at Palladam Madhapur. Dist president Kisan wing Mr. Ramesh Kumar is doing the planning for food well.
@blsanthosh
@annamalai_k
அமெரிக்கா அட்லாண்டாவிலுள்ள ஜார்ஜியா கொங்கு அமைப்பின் அழைப்பை ஏற்று, அவர்களோடு கலந்துரையாடிய இனிய தருணம்.
நாமக்கல்லைச் சார்ந்த நண்பர் திரு.பழனி வீரப்பன் கொங்கு நண்பர்களை ஒருங்கிணைக்கும் பணி பாராட்டுக்குரியது.
கேரளா அமைச்சர் திறந்த முல்லைப்பெரியாறு அணை - தமிழக விவசாயிகளுக்கு திமுக அரசின�� மாபெரும் துரோகம்.பாஜக சார்பில் நவம்பர் 8-ல் பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை IPS தலைமையில் தேனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.மதுரை பாஜக விவசாய அணி ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு. திரு.
@annamalai_K
General meeting of BJP was held in Pudukottai.BJP State President Mr. Annamalai attended and gave a special speech. Mr.G.K.Nagaraj, BJP State kisan President, participated and spoke on for Pudukottai district Cauvery-Gundaru link project. But the DMK govt has shelved the project.
இயற்கையை அழித்து விற்றுப்பிழைக்க துவங்கிவிட்டது விடியல் அரசு.மேற்குத்தொடர்ச்சிமலையை ஒட்டிய தமிழகப்பகுதியில் சட்டவிரோதமாகப் பாறைகளைத் தகர்த்து,கடத்தும் செயலை கண்காணித்து அறிக்கை அளிக்க பாஜக விவசாய அணி சார்பில் குழு அமைப்பு.
இன்று கோவை பாராளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் நவீன பிரச்சார வாகனத்தை, பாஜகவின் தீவிர உறுப்பினர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
உடன் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் திரு.G.K.நாகராஜ்.
பாஜக விவசாய அணியின் மாநில செயற்குழு கூட்டம் திரு.G.K நாகராஜ் அவர்கள் தலைமையில் இன்று சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது.மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு.கேசவ விநாயகம் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு வழிகாட்டினார்.
2046-ல் இந்தியா வல்லரசாவது உறுதி.பாஜக நிர்வாகிகள் மனஉறுதியோடு திராவிட புரட்டுகளை எதிர்கொள்ள வேண்டும்.விவசாய அணி பொதுச்செயலாளர் திரு.ரவிச்சந்திரன் நிறுவனத்துவக்கவிழாவில் மாநில தலைவர் திரு.அண்ணாமலை பேச்சு.
மத்திய அரசின் திட்டப்பணிகளை ஆய்வுசெய்ய கோவைவருகைபுரிந்த மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி ராணி AC அறையில் தனியாக உணவருந்த இடம் ஒதுக்கப்பட்டும்,அதை புறக்கணித்து மக்களோடு மக்களாய் அமர்ந்து அன்னபூர்ணா சாம்பார் இட்லியை விரும்பி சாப்பிட்டார்.
கோவையில் வரும் 26-ம் தேதி மாலை 3.30 மணிக்கு சிவானந்தாகாலனி அருகில் பவர் ஹவுஸ் பகுதியில் மாநில தலைவர் திரு.அண்ணாமலை Ex.IPS அவர்கள் தலைமையில் பாஜக நிர்வாகிகள்,தொண்டர்கள் கைதைக் கண்டித்து,இந்து விரோத திமுக அரசை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
அலைகடலென அனைவரும் திரண்டு வாரீர்
விவசாயத்தை விரும்பி பாஜகவில் இணைந்து விவசாய அணியில் பொறுப்பேற்க விரும்பும் இளைஞர்கள்.கொங்கு மண்டலத்தின் பல்வேறு கட்சிகளில் இருந்து 99 இளைஞர்கள் பெருந்துறை P.சதீஷ்குமார் (தம்பிராயன்) அவர்கள் தலைமையில் எனது முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் தலைமையில் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது.
மாநில பார்வையாளர் திரு.C.T.ரவி அவர்கள் கலந்துகொண்டு வழிகாட்டினார்.மாநில விவசாய அணியின் செயல்பாடுகள் அனைவராலும் பாராட்டப்பட்டது.
அயோத்தி ராமர்கோவிலில் அர்ச்சனை செய்யப்பட்ட அட்சதை பிரசாதம்.
அயோத்தி ஸ்ரீராமப்பெருமான் சன்னதியில் அர்ச்சனை செய்யப்பட்ட அட்சதையை கோவை மாநகரம் சார்பாக பெற்றுக்கொண்டதில் பெருமை,மகிழ்ச்சி.
ஆதி யோகிக்கு அழகூட்டிய மங்கை வள்ளி கும்மி ஆட்டம்.
நொய்யல் ஆற்றை பாதுகாக்கும் வகையில் ஈஷா ஆதியோகி சிலை முன்பாக நொய்யல் பெருவிழா 2023 நிகழ்ச்சிக்கு 1250 வள்ளி கும்மி நடன கலைஞர்களை ஆட வைத்து நிகழ்வை துவக்கி வைத்த ஆசிரியர் சண்முகசுந்தரம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
விவசாய அணி என்றால் பாஜக தலைவருக்கு தனிப்பாசம்.நாமக்கல்லில் விவசாய அணி நிர்வாகிகளோடுஉரையாடிக்கொண்டிருந்தபோது, அதன் வழியே சென்ற மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் வாகனத்தைவிட்டு இறங்கிவந்து,”என் மண் என் மக்கள்”யாத்திரையில் விவசாய அணி நிர்வாகிகளின் பங்களிப்பை பாராட்டினார்.
ஒரு வாழைப்பழம் தரமறுத்தவருக்கு ஒரு வாழைத்தார் அன்பு பரிசு.கோவை பிரச்சாரத்திற்கு வருகைபுரிந்த நகைச்சுவை நடிகர் திரு.செந்தில் அவர்கள் எங்கள் தோட்டத்தில் விளைந்த வாழைத்தார், தேங்காய் உள்ளிட்டவற்றை அன்புப்பரிசாக எடுத்துச்சென்றார். நடிகர் செந்திலுடன் பிரச்சாரம் ஒரு இனிய அனுபவம்.
உலகம் சுற்றி உண்மை உரைத்து, மண்வளம் காக்கும் மகாசத்குருவுக்கு மகத்தான வரவேற்பு. விவசாய அணி சார்பில் இயற்கை காய்கறி பழங்களை பாசத்துடன் வழங்கினோம் கோவையில்
தமிழக அரசியலில் சமீபகாலங்களில் பாஜகவினுடைய வளர்ச்சிகண்டுபொறுக்காத எதிர்க்கட்சிகள் குறிப்பாக திமுகவைச் சார்ந்த அமைச்சர் காந்தி,திரு.அண்ணாமலை அவர்களை அவன்,இவன் என்று ஒருமையில் பேசியது்,காங்கிரஸ் தலைவர் திரு.EVKS இளங்கோவன் அவர்களின் தரக்குறைவான விமர்சனமும் கடும்கண்டனத்துக்குரியது.
பாஜகவில் இணைந்தனர்.
கோவை சூலூர் பாப்பம்பட்டி சண்முகசுந்தரம் ஜீவலதா தம்பதியினர் கொங்கு அமைப்பிலிருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியின் தேசப்பணியில் தங்களை இணைத்துக்கொண்டதோடு 25-க்கும் மேற்பட்ட தங்கள் உற்றார் உறவினர்களையும் பாஜகவில் இணைத்தனர்.அவர்கள் தேசப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.